பெரிச்சிக்கோயில் சுகந்தவனேசுவரர் திருக்கோயிலில் காரண ஆகம முறைப்படி பூசைகள் நடைபெற்று
வருகின்றன. கி.பி. 1940-ஆம் ஆண்டு வரை நான்குகாலப் பூசைகள் நடைபெற்று வந்தன. ஆனால்
இப்போது உச்சிக்காலப் பூசை மட்டும் நடைபெறுகிறது. திருக்கார்த்திகை, மகா சிவராத்தி,
ஆருத்ராதசனம், நவராத்தி, சனிப்பெயர்ச்சி ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. இக்கோயிலின்
தென்புறம் அமைந்துள்ள கிணறு தலத்தீர்த்தமாகவும், வன்னிமரம் தலவிருட்சமாகவும் திகழ்கிறது.
|