நகரத்தார்கள் திருக்கோயில் திருப்பணி செய்யத் தொடங்கிய காலத்தில் திருத்தொண்டர் புராணத்தில்
ஈடுபட்டுச் சிவனடியார்களிடத்தே பக்தி வைத்து அடியார்களது வடிவங்களைத் திருக்கோயில்களில்
நிறுவினர். கி.மு.1860-ஆம் ஆண்டிற்குப் பின்னர் நகரத்தார்கள் எழுப்பிய கோயில்கள் அனைத்திலும்
அறுபத்து மூவர்க்கும் திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. நடராசர் சன்னதிக்கு எதிரில் உள்சுற்றில்
வரிசையாக அறுபத்து மூவரை அமைத்து வழிபட்டனர். இவர்கள் நடராசரை வணங்கியவாறு இருக்கவேண்டும்
என்பதற்காகவும், ஞானப் பகுதியாக அமையும் கன்னிமூலை என்பதற்காகவும் இவ்வாறு அமைத்திருக்கின்றனர்.
செட்டிநாட்டில் உள்ள பல ஊர்களில் இச்சிற்பங்களைக் காண முடியும். சில ஊர்களில் சமய குரவர்
நால்வரை மட்டும் நிறுவியிருப்பர். தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் சேக்கிழார்க்குத்
தனிக் கருவறை அமைத்துச் சிறப்புத் தரப்பெற்றிருக்கிறது. வன்தொண்டர் நாராயணன் செட்டியார்
அவர்களின் முயற்சியால் சேக்கிழார் இவ்வூல் தனிக்கருவறையில் வைத்துக் கொண்டாடப் பெறுகிறார்.
இவ்வாறு செட்டிநாட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் கொண்டாடப் பெறுகின்றனர்.
செட்டிநாட்டு ஊர்கள் சிலவற்றில் நாயன்மார் திருவுருவங்களுக்குப் பதிலாக ஓவியங்கள் வசையாக
வரையப்பட்டிருக்கின்றன. காரைக்குடிக்கு அருகில் உள்ள சிவன்கோயில்களில் இதனைக் காணலாம்.
செட்டிநாட்டில் முதலில் கட்டப்பெற்ற சிவன்கோயில் கோவிலூர்ச் சிவன்கோயில் ஆகையால் இங்கு
நாயன்மார் வடிவங்களை ஓவியமாக வரைந்திருக்கின்றனர். ஓவியமாக வரைவதால் நாள்தோறும் திருமஞ்சனம்
ஆட்ட வேண்டியதில்லை; ஆடை, பூச்சூட்ட வேண்டியதில்லை. இதனால் திருக்கோயில் பணியாளர்களுக்குப்
பணி கூடுவதில்லை. இதனால்தான் பல ஊர்களில் அறுபத்து மூவர்க்குச் சிலை அமைக்காது ஓவியங்களாக
வரைந்திருக்கின்றனர்.
காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் அறுபத்து மூவர் மேற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு
நிறுவப்பட்டிருக்கின்றனர். இங்குக் கற்சிலைகளாகவும் செப்புச் சிலைகளாகவும் நாயன்மார்
வடிவங்கள் உள்ளன. திருவிழா நடத்துவதற்கு உரியவை செப்புச்சிலைகளே. ஆனால் இங்கு அறுபத்து
மூவர்க்குத் திருவிழா நடை பெறுவதில்லை.
நாயன்மார்கள் அனைவரும் இடப வாகனத்தில் உமா மகேசுவரனைத் தசித்தவர்கள். இவர்கள் அனைவரும்
காட்சி கொடுத்த நாதர் திருவருள் பெற்றவர்கள். அதனால் அறுபத்துமூன்று நாயன்மார்களை வரிசையாக
அமைத்து அவ்வசையின் இறுதியில் ஒருபுறம் விநாயகரையும், மற்றொருபுறம் உமாமகேசுவரரையும்
நிறுவியிருக்கின்றனர். இவர்களுடன் சப்த மாதர்களையும், விநாயகரையும் அமைப்பர். இக்காலத்தில்
இந்த வசையில் சரசுவதியையும் நிறுவுகின்றனர்.
|